Skip to content
Home » நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

நாகப்பட்டினம் மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் பயன்படுத்தும் வகையில் சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் உள்ளது. இந்த குளங்கள் தற்போது கழிவுநீராலும், குப்பைகள், கருவேல மரங்கள் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது. மேலும் தேங்கி உள்ள தண்ணீரால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதிலிருந்து விஷ பூச்சிகள் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை கடிப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குளத்து நீரில் அருகிலுள்ள தனியார் திருமண மண்டப கழிவுநீர் கலப்பதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர். வேளாங்கண்ணிக்கு பாதை யாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் குளித்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில் சிவன்கோயில் தெரு

குளம் அருகே உள்ள ஒரு மண்டபத்திலிருந்து வெளியேரும் கழிவுநீரால் மூன்று குளங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. கழிவுநீரால் குளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரங்கில் கருவைக்காடுகள் மரம்போல் முளைத்து குளம் பயன்பாடின்றி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தை துார்வாருவதுடன், கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், குளத்தை துார்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!