Skip to content
Home » நாகை…….வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

நாகை…….வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென அவரது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி பாண்டிமீனா மற்றும் 2 வயது குழந்தை யாசின் ராம் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும்  மீட்டு நாகை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு  குழந்தைைடிய பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக கூறினார். பாண்டிமீனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!