Skip to content
Home » கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் வானதிராஜபுரம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியம் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பெண்கள் உதவியால் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் இந்தக் கோயிலில் நடராஜரை பள்ளக்கில்  தூக்கும் வைபவத்தை பெண்கள் மட்டுமே நடத்துவர். பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நடராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாட்டிற்கு வந்த பெண்கள் பல்லக்கில் தூக்கிக்கொண்டு கோவிலில் பிரகாரங்களில் ஊர்வலமாக வந்தனர் ‌. மேலும் ஏராளமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் மட்டுமே சுவாமி சிலையை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருவது இங்கு மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!