Skip to content

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்…. மும்பையில் பெண் கைது

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை காவல் கட்டுப்பாட்டுஅறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவர், பிரதமரை கொலை செய்வதற்கான திட்டமும், ஆயுதமும் தயாராக இருப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  மிரட்டல் விடுத்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அந்த பெண் மீது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிடையே அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் போலீசார் முழுமையான விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.  சந்தேக நபரைக் கண்காணிக்கும் போது அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை போலீசார் உறுதிசெய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!