Skip to content
Home » 5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  இன்று அதி காலை 1 மணி முதல்  முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து கொட்டியதுமு.  காைல  7 மணி வரையிலான5 மணி நேரத்தில்  30சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.

புறநகர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை பேருந்து சேவைகளும் முடங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரமே காலையில் முடங்கியது.

இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வரும் 10 ம் தேதி வரை மழை தொடரவே செய்யும். குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் இன்று (ஜூலை 8) கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!