Skip to content
Home » திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று திமுக மகளிர் அணி, தொண்டர் அணி மற்றும் சமூக வலைதள அணி நேர்காணல் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னிலையில் வகித்துத் தொடங்கி வைத்தார். இந்த தி.மு.க மகளிரணி, தொண்டரணி நேர்காணலில், திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், திமுக மகளிரணி செயலாளர் ஜெ.ஹெலன் டேவிட்சன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.இராணி, திமுக மகளிரணி

இணைச்செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிரணி இணைச் செயலாளர் ராணி ரவிச்சந்திரன், திமுக பிரச்சாரக்குழு செயலாளர்.
டாக்டர் பி.எம்.யாழினி, திமுக மகளிர் அணி சமுக வலைத்தள பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

நேர்காணல் நடைபெறும் நேரம்: சென்னை தெற்கு – காலை 9 மணி,
சென்னை மேற்கு – காலை 10.30 மணி,
சென்னை தென்மேற்கு -காலை 12 மணி,
சென்னை வடக்கு – மதியம் 2 மணி,
சென்னை வடகிழக்கு -மதியம் 3 மணி,
சென்னை கிழக்கு-மாலை 4 மணி.
மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு பொறுப்புகளுக்கு விண்ணப்பித்த மகளிர் உறுப்பினர்கள் நேர்காணலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!