Skip to content
Home » முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் கல்வி கற்பதை தவிர்க்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பெ ரமண சரஸ்வதி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டமாக மேல குடியிருப்பு பள்ளியில் பயிலும் 76 மாணவர்கள் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இதை திட்டத்தின் முதல் கட்டத்தில் சின்ன வளையம் ஜெயங்கொண்டம் வடக்கு மற்றும் தெற்கு ஆதிதிராவிட நல்ல பள்ளி செங்குந்தபுரம் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட ஒன்பது பள்ளிகளை சேர்ந்த 464 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின்காலை உணவு திட்டத்தின் மூலம் 540 குழந்தைகள் பயனடைந்த வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!