Skip to content

மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

  • by Authour

திருச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி….  பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பல்வேறு குற்ற பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சாரம் செய்தால் அவமானமாக போய்விடும் என தெரிந்து பிரதமர் மோடி தன்னுடைய

பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார்.

மோடி மாடல் ஆட்சியில் பாஜகவினர் அராஜகம் செய்து வருகிறார்கள் அதன் காரணமாகவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். இந்த அராஜகத்தின் உச்சத்திற்கு முடிவு வந்து விட்டது. மோடியை அரசியல் களத்தில் இருந்தும் அதிகார களத்தில் இருந்தும் மக்கள் அப்புறபடுத்துவார்கள். காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!