Skip to content

மின்கம்பம் மீது மோதிய ஷேர் ஆட்டோ….உயிர்தப்பிய பயணிகள்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவர் கரூர் மாநகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை அழைத்துச் செல்லும் ஷேர் ஆட்டோவினை இயக்கி வருகிறார்.

இன்று வழக்கம்போல் தாந்தோணிமலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, கரூர் வரும் வழியில் உழவர் சந்தை பகுதியில் திடீரென்று ஆட்டோவில் பிரேக் பிடிக்காததால் சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் வாகனங்களுக்கு மேல் இடிக்காமல் இருக்க, சாலை ஓரத்தில் இருந்த இரண்டு மின் கம்பங்களுக்கு இடையே ஆட்டோவை ஓட்டுநர் சொருகி நிறுத்தி செயற்கையாக விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் ஆட்டோவின்

முன்பக்கம் மற்றும் இரும்பு மின் கம்பம் வளைந்து சேதம் ஏற்பட்டது. எதிரே வந்த வாகனங்கள், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை இயக்கி செயற்கையாக ஏற்படுத்திய விபத்தின் காரணமாக, ஆட்டோவில் பயணித்த 10 பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓட்டுனருக்கு லேசான சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓட்டுநரை விசாரணைக்காக கரூர் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!