Skip to content

அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம், மற்றும் சர்க்கரை அளவு, மற்றும் இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது.  அதில் உயர் ரத்த அழுத்தம் இருப்பதும், இதய துடிப்பு சீராக இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. எனவே அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையில் தான் இருக்கிறார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. அதற்கான சிகிச்சை தொடர்ந்து 3 நாட்கள் அளிக்க வேண்டும்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!