Skip to content

அமைச்சர் ரோஜா நிர்வாண படத்தில் நடித்தாரா? ஆந்திர அரசியலில் பரபரப்பு

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர்  நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.   தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைச்சரவையில்  ரோஜா அமைச்சராக உள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியையும், குறிப்பாக  சந்திரபாபு நாயுடு கைது குறித்தும்  ரோஜா காட்டமான  பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில் ரோஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி என்பவர் , அமைச்சர் ரோஜா நிர்வாண படங்களில் நடித்தவர் என்ற குற்றச்சாட்டை கூறினார்.  இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்ரோஜா இன்று அளித்த பேட்டியில்,  நான் நிர்வாண படத்தில் நடித்ததாக என்னை சித்ரவதை செய்கிறார்கள். இது தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு வீடியோவை காட்டினார்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என நிரூபிக்கவில்லை.  என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? உங்கள் கட்சியில் இருக்கும்போது நான் நல்லவள். இப்போது கெட்டவளா?  சந்திரபாபு நாயுடு இதை கண்டிக்காதது ஏன்?

இந்த இழிவான  தகவலை சொன்ன  பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி அவரது மனைவியே கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும்.(இவ்வாறு கூறிய ரோஜா கண்ணீர் விட்டு அழுதார்). இதற்கு நான் மான நஷ்ட வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் ரோஜா குறித்து அவதூறு பேசியதாக  பண்டாரு சத்திய நாராயண மூர்த்தியை  போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!