திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக சார்பில் மலைக்கோட்டை கழகச் செயலாளர் மோகன் , மாமன்ற உறுப்பினர் செந்தில், தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வண்ணம் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும்,தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தது பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார் . இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன், மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
