Skip to content

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதுவரை  விமான நிலையத்தில் எத்தனை பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது என்பதை  அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு

பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:… சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இருவருடனும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இருவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். துபாயில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பாதித்தவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓவியத்திற்காக ரத்தம் – பாதுகாப்பாக இல்லை” .’பிளட் ஆர்ட்’ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.ஓவியத்திற்காக ரத்தம் எடுக்கும்போது, பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை; புதிய வகை கொரோனா எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவில்லை; பாதிப்புகள் குறையவில்லை எனில், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!