கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.3.68 கோடி மதிப்பில் புதுபிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய திறப்பு விழா இன்று காலை நடந்தது. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி விழாவுக்கு தலைமை தாங்கினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு ஆம்னி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் 30.72 கோடி மதிப்பீட்டில் முடிவற்ற 15 புதிய திட்டப் பணிகளையும் அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார். மற்றும் ரூ. 271 கோடி மதிப்பீட்டில் 1028 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அரசு
கொறாடா ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேருந்து நிலையத்தில் 35 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வசதிகள், பாலூட்டும் அறை, காத்திருப்போர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கட்டண கழிப்பிடம் மற்றும் 32 கடைகள் இங்கு நிறுவப்பட்டுள்ளது.