அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்ததால், காணொளி காட்சி மூலம் அமைச்சர் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவருக்கு மேலும் 14 நாள்(அக்13 வரை) காவலை நீடித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
