Skip to content
Home » பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில் லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில் லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2 வது தளத்தில் இன்று மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை 11 மணி அளவில் கலெக்டர் அலுவலகம் வந்தார்.  அவர்  லிப்ட் மூலம் 2வது தளத்திற்கு சென்றார். அவருடன் பிரபாகரன் எம்.எல்.ஏ.,  அமைச்சரின் அவரது உதவியாளர் உள்பட 4 பேர் சென்றனர்.

லிப்ட் மேலே புறப்பட்டவுடன் பழுதாகி அப்படியே இடையில் நின்று விட்டது. இது குறித்து போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து  அங்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்தனர். உடனடியாகமெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கப்பட்டது. சுமார் 30 நிமிடம் லிப்ட்டுக்குள் சிக்கி இருந்த அமைச்சர், எம்.எல்.ஏ. ஆகியோர் பழுது நீக்கப்பட்டதும் மீண்டும் கீழ் தளத்திற்கு வந்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள்  படிக்கட்டு வழியாக 2வது தளத்திற்கு சென்றனர்.  பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!