Skip to content
Home » கதவு திறந்து தான் இருக்கிறது.. அண்ணாமலைக்கு துரைமுருகன் “பஞ்ச்”

கதவு திறந்து தான் இருக்கிறது.. அண்ணாமலைக்கு துரைமுருகன் “பஞ்ச்”

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவரிடம் விரைவில் அமலாக்கத்துறை வேலூர் எம்பி கதிரானந்த் வீட்டு கதவை தட்டும் என நேற்று கே வி குப்பத்தில் நடைபெற்ற என் மண், என் மக்கள் நடை பயணத்தின் போது அண்ணாமலை கூறியிருக்கிறாரே? என நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளித்த துரைமுருகன்  ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம் அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு நாங்களே திறந்து வைத்திருக்கிறோம் என்றார். அதேபோல் பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறியது குறித்து கேட்டதற்கு அவர் என்ன வந்து பார்த்தாரா. பெரிய பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது பிறகு துரைமுருகன் சொன்னதாக எதையாவது ஒன்னு போட்டு குட்டையை கிளப்பி விடுவீர்கள். கூட்டணி குறித்து முறையாக அறிவிப்பு வரும் என்றார் துரைமுருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!