Skip to content
Home » மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் தூள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவில் மாணவ மாணவர்களுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடைபெற்ற இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முசிறி செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்ஸி கேடயம் வழங்கி பாராட்டினார்

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் திருமாறன் இளநம்பி உதவி மின் பொறியாளர் சங்கர்
உதவி மின் பொறியாளர் சதீஷ்குமார் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். கேடயம் வழங்கி பேசிய செயற்பொறியாளர் மின் சிக்கனம் குறித்தும் மின்சாரம்

எப்படி பயன்படுத்துவது குறித்தும் அனைத்து வீடுகளுக்கும் எல்இடி பல்ப் பயன்படுத்தி மின்சாரத்திற்கானத்தை கடைபிடிக்க வேண்டும் என பேசினார் வெற்றி பெற்ற மோனிஷா ரூபா தர்ஷிகா கமலம் காவியா ஆகியோருக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமலதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!