Skip to content
Home » சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில்நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்த ஏ.கே.47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப் பகுதி,  பரந்து விரிந்த அடர்ந்த காடு. இது மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்கு பாதுகாப்பு படையினர் பல முறை தேடுதல் வேட்டைநடத்தி, 50 சதவீத பகுதியை அதாவது சுமார் 4000 சதுர கி.மீ பகுதியை மீட்டுள்ளனர்.

அப்போது கோவல்-நெந்தூர்-துல்துளி கிராமங்கள் அமைந்துள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நேற்று மதியம் 12.30 மணியளவில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. மாவோயிஸ்ட்களை சரணடையும்படி போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் சரணடையாமல், வனப் பகுதிக்குள் ஓடினர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.

அவர்களிடம் இருந்த ஏகே 47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையினருக்கு எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் இது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் மிகவும் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது.

சட்டீஸ்கரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 பெண்கள் உட்பட 9 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். இத்துடன் சட்டீஸ்கரில் இந்தாண்டு நடைபெற்ற என்கவுன்ட்டரில் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதுகாப்பு படையினர் 15 பேரும், பொதுமக்கள் 47 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!