Skip to content

கரூர்… அன்ன காமாட்சி அம்மன் கும்பாபிஷேக விழா……பால்குட ஊர்வலம்…

கரூர் பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கொடுமுடி ஆற்றில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க வெங்கமேடு காமாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து வண்ண உடை அணிந்து பால்குடம் மற்றும் முளப்பாரி எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதியில் வழியாக கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் நேற்று இரவு ஆலய வாசலில் அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் காலயாக வேள்வி நடைபெற்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!