Skip to content
Home » எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை..

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை..

  • by Senthil

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன், கோகுல இந்திரா,  செம்மலை,வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், , சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிட நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையிலே நினைவு நாளின் உறுதி மொழிஏற்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி சென்ற பிறகு தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்டோர் வந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருக்கிறார்கள் பல்வேறு தலைவர்கள் வரக்கூடிய காரணத்தினால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!