கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் மேகதாது விவகாரம் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கருத்து சர்ச்சையாகி உள்ள நிலையில் , இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
