Skip to content
Home » உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் பாளையம். இவருடைய மகன் சூர்யா (வயது 21), இவர் பால் பாக்கெட் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், சூர்யா தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகினார். தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி கடந்த 10 நாட்களாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இரவு சூர்யாவுக்கு மயக்கம் ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாததால் அவரை அவரது உறுவினர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சூர்யா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சோமங்கலம் போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!