மயிலாடுதுறை அருகே கீரனூர் கிராமத்தில் அய்யனார், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் பங்குனி உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இந்நிலையில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் தேரினை தலையில் சுமந்து 10கி.மீ.தூரம்வரை ஊர் எல்லையான வயல் பகுதியை சுற்றி வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே தேரினை தலையில் சுமந்து சென்று… கிராம மக்கள் நூதன வழிபாடு:-
- by Authour
