Skip to content

மயிலாடுதுறை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்..

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஆக்கூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 140 மிதிவண்டிகள், ஆக்கூர் ஓரியண்டல் அரபி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 27 மிதிவண்டிகள் என மொத்தம் 167 மிதிவண்டிகள் வழங்கும் விழா ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் கலந்து கொண்டு விலையில்லா மிதி வண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கி விழா சிறப்புரையாற்றி பேசினார். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!