Skip to content

புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் கொடியேற்று நிகழ்வு.. ஆர்ச்-சை அகற்ற உத்தரவு…

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை தொடங்கி, அக்கட்சியின் கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார். அக்கட்சியின் மாநாடு விரைவில் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். கட்சி மாநாடு குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசனையில் ஈடுபட உள்ள ஆனந்த், முன்னதாக மயிலாடுதுறையில்

இரண்டு இடங்களில் கட்சியின் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். மாயூரநாதர் கோயில் மேல வீதியில் கட்சி கொடி ஏற்றும் விழாவுக்கு போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மாயூரநாதர் கோவில் மேலவிதியில் பொதுச் செயலாளரை வரவேற்று கட்சியினர் ஆர்ச் அமைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலையை ஆக்ரமித்து ஆர்ச் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறி அந்த ஆர்ச்-சை அகற்ற தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து வேறு வழியின்றி கட்சி நிர்வாகிகள் அந்த ஆர்ச்சை அகற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!