Skip to content
Home » இலவச திருமணம் செய்து வைத்த மயிலாடுதுறை நகராட்சி தலைவர்….

இலவச திருமணம் செய்து வைத்த மயிலாடுதுறை நகராட்சி தலைவர்….

  • by Senthil

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதுமான இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின்படி ஒரு தம்பதிக்கு இன்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதைமுன்னிட்டு அந்த தம்பதிக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடைகள், முகூர்த்த மாலைகள் மற்றும் சீர்வரிசையை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர். தொடர்ந்து, மயிலாடுதுறை நகராட்சித் தலைவர் குண்டாமணி.செல்வராஜ் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!