Skip to content

இறுதி கட்ட பிரசாரத்தில் மயிலாடுதுறையில் தீவிரம் காட்டும் காங்.வேட்பாளர் …

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவு அடைய உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டமங்கலம் அகரகீங்குடி, கோடங்குடி, மன்னம்பந்தல், நல்லத்துக்குடி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் பேரணியாக ஆதரவாளர்கள் புடை சூழ திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மன்னம்பந்தல் ஊராட்சி பகுதிக்கு வந்த வேட்பாளருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர் தூவி, மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.‌ மேலும் கைச்சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் வேட்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இதில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் உடன் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!