தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், தரங்கம்பாடி, குத்தாலம், மங்கைநல்லூர் என பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..
- by Authour
