Skip to content

மயிலாடுதுறையில் ஊழல் விழிப்புணர்வு பேரணி… கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

மயிலாடுதுறை நகரில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று மயிலாடுதுறையில் ஊழல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக,

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று நகராட்சி முன்பு நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஊழல் குறித்த உறுதி மொழியை கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!