Skip to content

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தவக்காலத்தின் புனித வார ஞாயிறுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறையல் பரசத்தி பெற்ற புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்வுகள் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி “தாவீதின் மகனுக்கு ஓசான்னா ஓசான்னா” என்ற பாடலை பாடியபடி பவனியில் பங்கேற்றனர். புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக அந்தோணியார் ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தமிழக அன்பிய பணிக்குழு செயலாளர் ஜான்போஸ்கோ “பிறர் நலம் காக்கும் பெரும் துணிவு வேண்டும்“ என்ற தலைப்பில் மறையுரையாற்றினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!