Skip to content

மயிலாடுதுறை அருகே ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு கோபூஜை விழா…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும், மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, கால்நடைகள் தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு, மாலைகளால் அலங்கரித்து, பொங்கலிட்டு, மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வாணாதிராஜபுரத்தில், கோசாலை (பசுக்கள் காப்பகம்) அமைந்துள்ளது. ஆதரவற்று திரியும் மாடுகள், பால் அற்றுப்போய் அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகள், முதுமையடைந்த மாடுகள் உள்ளிட்ட ஆதரவற்ற மாடுகள் இங்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. 1008 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இங்கு இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கோபூஜை விழா நடைபெற்றது. மாடுகளை குளிப்பாட்டி நெட்டிமாலைகள் அணிவித்து மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாடுகளுக்கு பழங்கள் கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!