Skip to content
Home » அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

  • by Senthil

சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவை தொடக்க விழா நடந்தது.  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , பேரவையை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாளை(ஏப்ரல்1) முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் தாண்டவம் ஆடுகிறது” என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!