Skip to content

திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

  • by Authour

மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜதாரா நகருக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தனர். டைட்யா மாவட்டம் புஹரா கிராமத்தில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் அருகே இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்தானது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள  ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!