Skip to content
Home » கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர்.  இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.  இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள பள்ளிகள் ஜூன் 15-ம் தேதி வரை மூடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!