Skip to content
Home » மணிப்பூர் கலவரம்…..கர்நாடக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார் அமித்ஷா

மணிப்பூர் கலவரம்…..கர்நாடக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார் அமித்ஷா

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்திகள் என்ற பழங்குடி இனத்தைச் சேராத மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கு பழங்குடி இனத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஆனால் 4 வாரத்துக்குள் மெய்தி இன மக்களின் பழங்குடியின அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புமாறு மணிப்பூர் ஐகோர்ட்டு சமீபத்தில் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது.மாநிலம் முழுவதும் பரவிய கலவரத்தில் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. பல மாவட்டங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  மக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி பிரேன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். அவரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மணிப்பூரில் ஏற்கனவே 15 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 5 கம்பெனி அதிரடிப் படையினரை அங்கு மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.  இந்த நிலையில், கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்த அமித்ஷா டில்லியில் முகாமிட்டு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். மணிப்பூரில் இயல்பு நிலைதிரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக வடகிழக்கு மாநில முதல் மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!