Skip to content
Home » வேண்டுமென்றே விடுபட்ட அமைச்சர் நேருவின் பெயர் ?… மணப்பாறையில் சம்பவம்…

வேண்டுமென்றே விடுபட்ட அமைச்சர் நேருவின் பெயர் ?… மணப்பாறையில் சம்பவம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி சார்பில் கால்நடை சந்தைக்கு அருகே 5-வது வார்டில் மணப்பாறை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.  இதனை கடந்த 19ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார். இதற்காக அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், அமைச்சர் மகேஷ், நகராட்சி தலைவர் கீதா மைக்கல் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் நகர்புற வளர்ச்சி  அமைச்சரான கே.என்.நேருவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் அப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வருதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் சிலர் முறையிட்டதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த கல்வெட்டு உடனடியாக அகற்றப்பட்டதுடன், பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக் நாகப்பட்டினத்துக்கும், நகராட்சி பணிகள் மேற்பார்வையாளர் ராஜேஷ் திருத்துறைப்பூண்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மணப்பாறை நகரப் பகுதி, திமுகவில் தெற்கு மாவட்டத்தில் உள்ளது. அதன் மாவட்டச் செயலாளராக அமைச்சர் மகேஷ் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!