Skip to content
Home » காதலனை தாக்கிய நாதக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.

காதலனை தாக்கிய நாதக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த திரிஷா என்பவரும் கல்லூரியில் படித்து வரும் சூழ்நிலையில் கடந்த 1 ½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் கடந்த 14 ம் தேதி வீட்டை விட்டு ஓடி மதுரை அருகே இலுப்பைக் குளத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் 16 ம் தேதி பெண்ணின் உறவினரான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளரும், வழக்கறிஞருமான அருணகிரி மற்றும் சாமிக்கண்ணு, கார்த்திக், பிரவின் குமார் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து காதலர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். அப்போது சாதி பெயரை சொல்லி சந்தோஷின் செல்போன் 20 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சந்தோஷின் மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் தாக்கி விட்டு அவரின் பெற்றோரை வரச் சொல்லி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சந்தோஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் அருணகிரி உள்ளிட்ட 4பேரை வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!