மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த தொழிலதிபா் நாகப்பன் மனைவி கல்யாணி (69). நாகப்பன் தனது எலக்ட்ரிக்கல் கடைக்கு மகன் ராமநாதனுடன் நேற்று சென்றுவிட்டார். பிற்பகல் ராமநாதன் வீடு திரும்பியபோது வீட்டின் சமையறையில் அவரது தாய் கல்யாணி இறந்து கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த 17பவுன் நகைகள் மற்றும் ஒரு பவுன் வைர தோடுகள், ரூ. 30 ஆயிரம் பணத்தையும் காணவில்லை. இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல் துணை கண்காணிப்பாளா் மரியமுத்து, காவல் ஆய்வாளா் குணசேகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார், திருச்சி தடய அறிவியல் துறையினரை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். அதனை தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் மூதாட்டி உடலை போலீசார் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
