Skip to content
Home » கஞ்சா விற்ற நபர் கைது…. 1 கிலோ பறிமுதல்…

கஞ்சா விற்ற நபர் கைது…. 1 கிலோ பறிமுதல்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் எஸ்ஐ திருவேங்கடம் மற்றும் போலீசார் வானதிரையின்பட்டினம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனையிட்டதில் அங்கு ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி தைலாகுளம் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக் என்பதும் வாணதிரையன்பட்டினம் முருகன் கோயில் அருகே வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் கார்த்திக்கை கைது செய்து அவர் விற்பனைக்காக இருந்த 1 கிலோ 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!