மாலத்தீவு அதிபராக இருப்பவர் முகமது முய்சு. அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் பாத்திமா ஷம்னாஸ் என்பவர் அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக புகார் எழுந்தது. பாத்திமா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், சூனியம் தொடர்பான பல பொருட்களை கைப்பற்றினர். இதனையடுத்து பாத்திமா ஷம்னாஸை போலீசார் கைது செய்தனர்.
பெரும்பகுதி முஸ்லிம்கள் வாழும் மாலத்தீவில், பண்டிதா அல்லது சிஹூரு என அழைக்கப்படும் பில்லி, சூனியம் வைப்பது, இஸ்லாமிய சட்டத்தில் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம். அதிபருக்கு எதிராகவே பெண் அமைச்சர் பில்லி, சூனியம் வைத்ததற்காக கைது செய்யப்பட்டது, அந்நாட்டில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.