Skip to content

மயிலாடுதுறை அரசு பொருட்காட்சியில் முதன்முறையாக நாய்கள் கண்காட்சி…

மயிலாடுதுறை மாவட்ட செய்தி விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி கடந்த 15ஆம் தேதி முதல் பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று முதல்முறையாக பொதுமக்கள் பங்கேற்கும் வளர்ப்பு நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கிரேடன், ஈரோப்பியன் டாபர்மேன், ப்ளூ டன் சிப்பி பாறை, கன்னி, பீகில், மின்பின், டேஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான 52 நாய்கள் பங்கேற்றன. கலந்து கொண்ட நாய்களுக்கு கம்பீரம்,  ஒய்யாரம்,  கட்டளைக்கு கீழ்ப்படிதல் உள்ளிட்ட பிரிவுகளில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதில்  பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த நாய்களுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி நிஷா, ஆர்டிஓ யுரேகா, செய்தி விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன்,  மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!