மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால் (35) கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதியன்று தன்னை பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் கந்து மீது போலீசார் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். ஜூலை 20, 2018 அன்று, கந்து மற்றொரு குற்றவாளி பிரேரு பெரு அமிலியர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றொரு குற்றவாளி தப்பியோடிவிட்டார், டிசம்பர் 23, 2020 அன்று கந்து கைது செய்யப்பட்டார். அவரை சிறை சுமார் 2 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுதலை செய்தது. இந்த நிலையில் போலி குற்றச்சாட்டில்’ 666 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்காக, 10,000 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, மத்தியப் பிரதேச அரசு மீது கந்து வழக்கு தொடர்ந்து உள்ளார். இதுகுறித்து வரது மனுவில் கூறி இருப்பதாவது.. தன் மீதான பொய்யான புகார்களின் அடிப்படையில் குடும்ப வாழ்க்கை இழப்பு மற்றும் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இழப்பு, மற்றும் மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்தல் ஆகியவறிற்காக ரூ.10,000 கோடி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்..
