Skip to content

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கணித்தபடி இன்று  காலையில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்றிருக்க வேண்டும். ஆனால்  அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெறுவது தாமதமாகிறது.    இன்று மாலை தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!