Skip to content

திருச்சி அருகே இளம்பெண் மர்ம சாவு…. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள ஆமுர் கிராமத்தைச் சேர்ந்த மலையாளி என்பவரது மகள் சங்கவி (20). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் தொட்டியம் பகுதியில் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காதல் ஜோடிக்கு  இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு காதலி சங்கவியை பார்ப்பதற்காக வந்த காதலனை அப்பகுதி இளைஞர்கள் நீ யார் என  கேட்டு  அவரை தாக்கினார்களாம். அப்போது காதலி சங்கவி என்னை பார்க்க தான் வந்துள்ளார் என கூறினாராம்.இதனால் அவரை பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலை  சங்கவி  அன்று இரவே அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து யாருக்கும் தெரியாமல் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து சங்கவியின் உடலை எரிப்பதற்கு   முடிவு செய்தனர்.  சங்கவி  உடலை  தகனம் செய்வற்கு கொண்டு செல்லும் வழியில் சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதில் சங்கவி சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி இருந்தனர்.  தகவல் அறிந்த  வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சங்கவி வயிற்று வலியால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!