Skip to content
Home » மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

மூன்று முடிச்சு படத்தில் நடிகை ஸ்ரீதேவியை  ரஜினிகாந்த் ஒருதலையாக காதலிப்பார். இந்த காதல் மற்றும் ரஜினியின் டார்ச்சரால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  ஸ்ரீதேவி, ரஜினியின்  தந்தையை திருமணம் செய்து கொள்வார்.  பாலசந்தர் படங்களில் இப்படி பல எதிர்பாரத திருப்பங்கள் இருக்கும்.  அது கதைக்கு விறுவிறுப்பை கூட்டும். ஆனால் உண்மையில்  இப்படி சம்பவங்கள் நடக்குமா என  எல்லோரும்  திகைப்பார்கள். ஆனால் உ.பி. மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மகன் காதலித்த பெண்ணை, தந்தை கரெக்ட் செய்து  அந்த பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததுடன் ஒரு வருடமாக குடும்பம் நடத்தி  வந்துள்ளார்.

 

உ.பி. மாநிலத்தை சேர்ந்த  கம்லேஷ்குமார்(50) . இவர்  தனது 20 வயது மகன் அமித் உடன் கான்பூரின் சக்கேரி பகுதிக்கு கட்டிட தொழிலுக்கு வந்தார். அமித் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார்.  அந்த இளம்பெண் அடிக்கடி அமித்தின் வீட்டிற்கு வந்து சென்று உள்ளார். அப்போது அமித்தின் தந்தை கமலேஷ்குமாருடன் அந்த இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில்  திடீரென  இளம் பெண்ணும் , கமலேஷ்குமாரையும் காணவில்லை. இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் சக்கேரி காவல் நிலையத்தில் இளம்பெண் கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர்.வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். ஓராண்டு விசாரணை நடத்திய போலீசார், இருவரையும் டில்லியில் கண்டுபிடித்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கமலேஷ் மற்றும் இளம்பெண் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.  கமலேஷ் தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில், புதன்கிழமை அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. கமலேஷுடன் வாழ விரும்புவதாக இளம்பெண் போலீசாரிடம் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!