Skip to content

காதலனை கரம் பிடித்த கரூர் பள்ளி மாணவி, திருமண கோலத்தில் கடத்தல்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது
சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அம்மாபேட்டையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் , அந்த மாணவியை காதலித்து வந்தார்.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர், மாணவிக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதில் விருப்பம் இல்லாத மாணவி, இது குறித்து தன் காதலனிடம் தெரிவித்தார்.
மாணவிக்கு கட்டாய திருமணம் செய்ய பெற்றோர்கள் இருந்த நிலையில்
சம்பவத்தை சிறுமி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். காதலன் மாணவியை அய்யர்மலை பகுதிக்கு அழைத்து வந்து அங்கு ஒரு கோவிலில் மாணவிக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார்

இந்த சம்பவத்தை கல்லூரி மாணவர், அம்மாபேட்டையில் உள்ள தனது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பெற்றோர்களும் அய்யர் மலைக்கு வந்துள்ளனர்.
வந்த பெற்றோர்கள் ஒரு வாடகை ஆம்னி வேனில் மகனையும் திருமணம் செய்த மாணவியையும் தோகைமலை காவல் நிலையத்திற்கு ஆஜராக அழைத்துச் சென்றுள்ளனர்.
குளித்தலை- மணப்பாறை சாலையில் சென்றபோது அக்காண்டி மேடு என்ற இடத்தில் மாணவியின் உறவினர்கள் வந்து வேலை மறித்து வேனை அடித்து நொறுக்கி
வேனில் இருந்த காதலனின் உறவினர்களை அடித்து உதைத்து மணப்பெண்ணை மீட்டு சென்றனர்.

இந்த சம்பவம் பிரதான சாலையில் சினிமா பாணியில் நடந்ததால்
சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் வந்ததால் சம்பவம் பரபரப்பானது.

சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை போலீசார் காயம் அடைந்த
கல்லூரி சிறுவன் மற்றும் அவரது தம்பியை தோகை மலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சம்பவம் குறித்து மாணவனின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார்காரை அடித்து சேதப்படுத்தி, மாணவன் மற்றும் அவரது தம்பியை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்தனர். மாணவியின் உறவினர்கள் கழுகூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்ரமணி(48.)பிச்சைமுத்து மகன் சஞ்சய்(20)
ஆகியஇரண்டு பேரை
கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!