Skip to content

காதல் விவகாரம்… 4-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18)_ என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் கல்வி பயின்று வந்தார். இந்த நிலையில், நேற்று காலை கல்லூரி விடுதி கட்டிடத்தின் 4-வது மாடிக்குச் சென்ற அவர் திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில், கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையில் இருந்த மாணவி  இன்று காலை சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் மாணவி பபிஷா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது தற்கொலைக்கு காதல் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா  என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!