Skip to content

லாரி அலுவலக ஊழியரை தாக்கி பணம் கொள்ளை…. 3 பேர் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

  • by Authour

திருச்சி பாலக்கரை உதயன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாரி ஷெட்டில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் அவர் காந்தி மார்க்கெட் சப்-ஜெயில் சாலையில் ஒருலாரி செட் அருகே நடந்து சென்றபோது 3 நபர்கள் அவரை வழிமறித்து கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த வசூல் பணமான 6 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்று மாயமாயினர். இது குறித்து விஸ்வநாதன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில்

ஆய்வாளர் சிவராமனிடம் அளித்தார். புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 நபர்களை தேடி வருகின்றனர்.இது தொடர்பான சி.சி.வி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் அவர்கள் சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!