மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டை மெயின்ரோடு பகுதியைசேர்ந்தவர் முத்து மனைவி சரஸ்வரி(41). 10ஆம் வகுப்பு படித்துவரும் இவரது ஒரே மகனை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் விட்டுவிட்டு, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். பள்யிலிருந்து மயிலாடுதுறை தென்னமரச்சாலை வழியாக சென்றுள்ளார். தனியார் திருமணமண்டபத்திற்கு எதிரே உள்ள சாலைபிரிப்பான் பகுதியில் படுவேகமாக பின்னால் வந்த லாரிமோதிய விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சரஸ்வதி தலைசிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். மயிலாடுதுறை போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுனரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். சரஸ்வதியின் கணவர் முத்து சிங்கப்பூரில் பணியாற்றிவருகிறார்.
மகனை பள்ளியில் விட்டுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிய பெண் லாரி மோதி பலி…
- by Authour
